News April 9, 2024

கிருஷ்ணகிரி: ரொக்கப்பணம் பறிமுதல்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி – சிகரலப்பள்ளி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை இட்டபோது உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News December 31, 2025

கிருஷ்ணகிரி: முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி!

image

ஓசூர் மூக்கணடப்பள்ளி அரசனட்டி பாரதி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (60). கூலித் தொழிலாளி. இவர் மத்திகிரி அருகே உள்ளிவீரனப்பள்ளியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதலாவது தளத்திலிருந்த அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

News December 31, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (டிச-30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (டிச-30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!