News August 25, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத முதல் திங்கட்கிழமையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணியளவில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு பலவித வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Similar News
News August 26, 2025
டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள விவசாய கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறைகளில் 2 வருட டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் (21.08.2025 முதல் 29.08.2025 வரை). விண்ணப்பிக்க https://tnau.ac.in (அ) நேரடியாக பல்கலைக்கழகத்தை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
நாமக்கல் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) வெளியிடப்பட்ட அறிவிப்பில், ’வாகன உரியாளர்மைகளுக்கு போக்குவரத்து விதிமீறல், தொடர்பாக உங்களுக்கு வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், APK File, தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். மேலும், உதவிக்கு 1930, இணையதள புகார்களுக்கு www.cybercrime.gov.in தொடர்பு கொள்ளலாம்’
News August 26, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் இந்நிலையில் இன்று
(ஆகஸ்ட்25) நாமக்கல்- ராஜமோகன் 94422-56423, ராசிபுரம்-சின்னப்பன் 94981-69092, குமாரபாளையம்- செல்வராஜு 99944-97140, பள்ளிபாளையம்- டேவிட் பாலு 94865-40373, வேலூர்-ரவி 94981-68482 ஆகியோர் உள்ளனர்.