News August 25, 2025

குமரியில் இனி அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்

image

குமரியில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்து நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

குமரி மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

குமரி மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News August 27, 2025

குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
<<17530837>>தொடர்ச்சி<<>>

News August 27, 2025

பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி

image

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பை சரி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!