News August 25, 2025

தருமபுரி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

தருமபுரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

image

தருமபுரி மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 25, 2025

குறைதீர் முகாமில் 543 மனுக்கள் பெறப்பட்டது

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (ஆக.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களிடமிருந்து புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள்,உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 543 மனுக்கள் வரப்பெற்றதாக ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!