News August 25, 2025
புகார் எண் 104ன் சேவைகள்

இந்த 104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். SHARE
Similar News
News August 25, 2025
க.குறிச்சி: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
திருக்கோவிலூர் வருகை தரும் அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு அருகில் நாளை (26-08-2025) மாலை 5 மணியளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மு.எம்.பி பொன்.கௌதம் சிகாமணி தலைமையில் அண்ணா அறிவகம் (District பிரிவால்) அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சரும் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி கலந்து கொள்ள உள்ளார்.
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகவும், தனிநபர் தங்கள் குறைகள் குறித்தும் மனுக்கள் அளித்து பயன்படலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.