News April 9, 2024
மத்திய அரசின் தலையீட்டால் மணிப்பூரில் முன்னேற்றம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர், “மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
Similar News
News August 12, 2025
ராசி பலன்கள் (12.08.2025)

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – பொறுமை ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – ஆதரவு ➤ துலாம் – சாந்தம் ➤ விருச்சிகம் – கவனம் ➤ தனுசு – உதவி ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – நற்செயல்.
News August 11, 2025
தூங்கும்போது உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா?

தூங்கும் போது கை, கால்கள் மரத்துப் போகும் பிரச்னை பலருக்கு இருக்கலாம். விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளிலோ, கால்கள், சியாட்டிக் நரம்பு பகுதியிலோ அழுத்தம் அதிகமாகையில் அப்பகுதிகள் மரத்துப் போகும். ரத்தவோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, பி6, மக்னீசியம் சத்துகள் குறைவு கூட இதற்கு காரணமாகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதற்கு சிறந்த தீர்வாகும்.
News August 11, 2025
வீடு தேடி வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.