News August 25, 2025
பனீரை விரும்பி சாப்பிடுகிறீர்களா..

தற்போது பல இந்தியாவில் 83% போலி பனீர்கள் விற்கப்படுவதாக Food Safety and Standards Authority of India எச்சரித்துள்ளது. இந்த போலி பனீர், மைதா, ArrowRoot powder, Urea போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலி. ஒரிஜினல் பனீரில், அது படிமனாக தங்கி விடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
Similar News
News August 25, 2025
பேனாவுல எழுதுனா இவ்வளவு நன்மை இருக்கு..!

கடைசியா எப்போ பேனாவுல எழுதுனீங்க? இந்த கேள்வி இப்போ எதுக்குன்னு உங்களுக்கு தோணலாம். இப்படி கேட்க காரணம் இருக்கு. எல்லாமே டிஜிட்டல் மயமா ஆகிட்டதுனால பேனாவுல எழுதுறத நம்ம மறந்துட்டோம் என்றும் இதனால் கற்றல் அறிவு குறஞ்சிட்டதா நிபுணர்கள் சொல்றாங்க. பேனாவுல எழுதுறது நம்ம அறிவாற்றல கூட்டுறதோட மட்டுமில்லாம பார்கின்சன் நோயைக் கண்டறியவும் உதவுதாம். அதனால, திரும்பவும் பேனாவுல எழுத தொடங்குங்க.
News August 25, 2025
தமிழக மூத்த தலைவர் கவலைக்கிடம்.. HEALTH UPDATE

CPI மூத்த தலைவர் <<17516027>>நல்லகண்ணு<<>> உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் உள்ளார். இந்நிலையில், அவரை நேரில் சந்தித்த பிறகு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நல்லகண்ணுவின் நுரையீரலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், Dr.சாந்தாராம் தலைமையிலான குழு சிகிச்சை அளித்து அந்த அடைப்பை நீக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும், நாளை CT ஸ்கேன் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
மருத்துவமனையில் மூத்த தலைவர்.. பரபரப்பு அறிக்கை

ஹாஸ்பிடலில் உள்ள நல்லகண்ணுவை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்த மூத்த தலைவர் நல்லகண்ணு(100), தற்போது ராஜீவ் காந்தி GH-ல் சிகிச்சையில் உள்ளார். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்தனர். இதனிடையே, ICU-வில் தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரை, டாக்டர்கள், குடும்பத்தினர் கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.