News August 25, 2025

திருவாரூர்: ஆற்று சுழலில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

image

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடியைச் சேர்ந்தவர் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர் குகன்(18). இவர், நேற்று முன்தினம் மாலை குகன், சேகரை அருகே உள்ள வெண்ணாற்றுத் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்று சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை அடுத்து, சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தேடியதில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 25, 2025

திருவாரூர்: திருமணத் தடை நீக்கும் கோயில்!

image

திருவாரூர் அடுத்த திருநெல்லிக்காவில் அமைந்துள்ள நெல்லிவனநாதர் கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் நெல்லிவனநாதர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இத்தகவலை SAHRE பண்ணுங்க..

News August 25, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.,28-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை திருவாரூர், மாவட்ட
ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே திருவாரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-கடைசி வாய்ப்பு

image

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இந்த லிங்கிள்<<>> விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (26.08.2025) வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!