News August 25, 2025

தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

அதிராம்பட்டினம், சாலியமங்கலம், அய்யம்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை, மெலட்டூர், பூண்டி, சாலியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி – மாலை 3 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளை வீரக்குடி, தஞ்சை துணை மின் நிலையங்களிலும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 25, 2025

மாணவனுக்கு உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவி தொகையாக ரூ.50,000 காசோலையை, பேராவூரணி வட்டம் முடப்புளிக்காடு பகுதியை சேர்ந்த ஹரி என்பவருக்கு தொழிற்கல்வி படிப்பதற்காக வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

மதுபான கடையில் தகராறில் ஈடுபட்டவருக்கு குண்டர் சட்டம்

image

பட்டுக்கோட்டையில் கடந்த 30 ஆம் தேதி மதுபான கடையில் தகராறு செய்த வீரமணி என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு.

News August 25, 2025

தஞ்சை: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

error: Content is protected !!