News August 25, 2025

அப்போ வாக்கு திருட்டு! இப்போ ஆட்சி திருட்டு: கார்கே காட்டம்

image

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் பாஜக ஈடுபட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார். ஜனநாயகத்தை சீர்குலைக்க கைது நடவடிக்கையை கருவியாக பாஜக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News August 25, 2025

ஆம்புலன்ஸ் தாக்குதலுக்கு EPS தான் காரணம்: எழிலன்

image

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

முதல்வரை கத்தியால் குத்த திட்டம்!

image

டெல்லி CM <<17460200>>ரேகா குப்தாவை<<>> அறைந்த ராஜேஷ் சகாரியா, விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். CM ரேகா குப்தாவை கத்தியால் குத்த திட்டமிட்டதாகவும், ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக கத்தியை வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தெருநாய்களை அகற்றுவதற்கு எதிரான தனது கோரிக்கையை CM ரேகா குப்தா நிராகரித்ததன் காரணமாகவே தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

BREAKING: தேதியை அறிவித்தார் பிரேமலதா

image

கடலூரில் (வேப்பூர் அருகில்) ஜனவரி 9-ம் தேதி தேமுதிக ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O’ நடைபெறும் என்று விஜயகாந்த் பிறந்தநாளான இன்று பிரேமலதா அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி, தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த மாநாட்டில் தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!