News August 25, 2025
கடன் தொல்லையால் ஓட்டுநர் தற்கொலை

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டி(33) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். டிரைவர் பாண்டி குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 26, 2025
சிவகாசியில் இந்தாண்டு 30% விலை உயரும்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் மொத்த வியாபாரிகள் பட்டாசு வாங்க குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி முன்கூட்டியே வரும் நிலையில் அதிக அளவிலான வெடி விபத்து விபத்தின் காரணமாக நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பட்டாசு 30% வரை விலை உயர வாய்ப்புள்ளது.
News August 26, 2025
மாவட்டத்தில் 1200 ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் 318 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 101 பள்ளிகளில் 15,072 மாணவர்கள் என மொத்தம் 144 பள்ளிகளில் 23,242 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதே போல் 1200 அரசுப் பள்ளிகளில் 69,333 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.
News August 26, 2025
விருதுநகர்: ரூ.64,480 ஊதியத்தில் வேலை

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – ரூ.64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<