News April 8, 2024

தூத்துக்குடியில் போட்டியிட திமுகவில் ஆள் இல்லையா?

image

தன்னைப் பற்றி கனிமொழி கவலைப்படுவது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென்சென்னை தொகுதியில் தமிழிசை போட்டியிடும் நிலையில் பாஜகவில் ஆள் இல்லாததால் தான், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் போட்டியிடுவதாக கனிமொழி விமர்சித்திருந்தார். இதற்கு, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை தவிர வேறு யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. இதற்கு, திமுகவில் ஆள் இல்லாதது காரணமா என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News November 5, 2025

DNA சோதனைக்கு ரெடி.. சவால் விட்ட ஜாய் கிரிசில்டா!

image

தனது குழந்தைக்கு <<18204429>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> தான் தந்தை என்பதை நிரூபிக்க DNA சோதனைக்கு தயார் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். தனது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், இந்த நிலையிலும் மாதம்பட்டி மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மிரட்டி திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சின்ன குழந்தையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 5, 2025

மொத்தமாக அரிசிக்கு ‘NO’ சொல்றீங்களா? உஷார்

image

டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரிசியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், அப்படி செய்வது உடலுக்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசை, மூட்டுகள் சரியாக வேலை செய்ய, உடலுக்கு Glycogen அவசியம். இந்த Glycogen, கார்போஹைட்ரேட்டில் இருந்து தான் கிடைக்கிறது. எளிதில் செரிமானமாகும், கார்போஹைட்ரேட்டை கொடுக்கும் அரிசியை ஒதுக்குவதால், பல பிரச்னைகள் வரலாம். எனவே, கொஞ்சம் அரிசியை சாப்பிடுங்க.

News November 5, 2025

நடிகை கனகாவுக்கு நடந்த துயரம்.. ராமராஜன் உருக்கம்

image

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

error: Content is protected !!