News April 8, 2024
IPL: 137 ரன்னில் சுருண்ட KKR

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்த KKR அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். CSK தரப்பில் ஜடேஜா 3, தேஷ்பாண்டே 3, முஸ்தஃபிசுர் 2, தீக்ஷனா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். CSK அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
ஒரு படம்.. ஓராயிரம் அர்த்தங்கள்! PHOTOS

100 பக்கங்களில் விவரிக்க முடியாத ஒரு உணர்வை, ஒரு சிறு போட்டோ உணர்த்திவிடும். சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் மீம்ஸ்களும் அப்படித்தான். நம்மை பல நேரங்களில் சிரிக்க வைக்கும் இந்த மீம்ஸ், அதே அளவுக்கு சிந்திக்கவும் தூண்டுகின்றன. ஒரே படம் என்றாலும், ஆழமான கருத்துகளை கொண்ட வைரல் மீம்ஸ் கேலரி உங்களுக்காக.. படங்களை Swipe செய்து பார்க்கவும்.
News November 5, 2025
பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து VIDEO

ஓசூர், Tata Electronics நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2,000 பெண் ஊழியர்கள் ஓசூர் – தருமபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்களின் கண்ணியம் காக்க TN அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News November 5, 2025
DNA சோதனைக்கு ரெடி.. சவால் விட்ட ஜாய் கிரிசில்டா!

தனது குழந்தைக்கு <<18204429>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> தான் தந்தை என்பதை நிரூபிக்க DNA சோதனைக்கு தயார் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். தனது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், இந்த நிலையிலும் மாதம்பட்டி மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மிரட்டி திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சின்ன குழந்தையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


