News August 24, 2025
அரியலூர்: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ரகுபதி, ரவிச்சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News August 25, 2025
அரியலூர்: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <
News August 25, 2025
அரியலூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க!

அரியலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
ஆரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

ஆரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தைக்குளம் மற்றும் ஓலையூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இன்று (ஆகஸ்ட் 25) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், ஓலையூர், பெரியதுக்குறிச்சி, விழுடுடையான் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!