News August 24, 2025

தாம்பரம் பெண்ணிடம் ரூ.1.24 கோடி மோசடி

image

தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பியதாகக் கூறி தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1.24 கோடியை மோசடி செய்த ஒடிசாவைச் சேர்ந்த தாவத் பிரவீன்குமார் (28), ஆகாஷ் மோகன்டி (26) ஆகிய இருவரைச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டி பணத்தைப் பறித்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 25, 2025

தாம்புரம்: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

image

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

செங்கல்பட்டு அருகே கார் மோதி இருவர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஆக.24) இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியே வேகமாக வந்த கார் மோதியதில் சதீஷ்குமார் மற்றும் சுனில் என்ற இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 25, 2025

செங்கல்பட்டு இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக. 24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!