News August 24, 2025

டாஸ்மாக் அரசுக்கு, தூய்மை பணி தனியாருக்கா? சீமான்

image

மக்களின் உயிரை கொல்லும் TASMAC கடையை அரசு நடத்தும்போது, தூய்மை பணியை அரசு நடத்த தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத்துறை அலட்சியத்தால் உயிரிழந்த இளம் தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டால் போதுமா என்றார். மேலும், குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளை தனியாருக்கு கொடுத்தால் அரசு எதற்கு என சாடினார்.

Similar News

News August 25, 2025

நிறம் மாறும் விநாயகர்.. அற்புத கோயில்!

image

நாகர்கோவில் அருகே உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் அதிசய விநாயகர் கோயிலில், விநாயகரின் சிலை 6 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுகிறது. மார்ச் – ஜூனில் விநாயகர் கருப்பாகவும், ஜூலை – பிப்ரவரியில் விநாயகர் வெள்ளை நிறமாகவும் மாறுகிறார் என கூறப்படுகிறது. மேலும், கோயில் கிணற்றின் நீர், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது கருப்பாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது வெள்ளை நிறமாகவும் மாறுகிறதாம்.

News August 25, 2025

அதிமுக கூட்டணியில் இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

ADMK கூட்டணியில் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி அப்படி ஒரு கூட்டணி இருக்கிறதா என கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் மதுரை மாநாடு நல்ல எழுச்சி என புகழாரம் சூட்டினார். மேலும், அங்கிள் என கூறியது தவறு என்றால் டாடி, BRO என கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் வரும் தேர்தலில் தவெகவுடன் இணையலாம் என பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News August 25, 2025

நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: அமித்ஷா

image

சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல என அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால் தேசத்தின் வளர்ச்சியில், அதன் பங்களிப்பு பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நிதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அவையை நடத்த அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல என தெரிவித்தார்.

error: Content is protected !!