News August 24, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 25, 2025
தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்

திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை,சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. நேற்று மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
News August 25, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
விழுப்புரத்தில் 10th போதும், சூப்பர் வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள SBI வங்கிகளில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 18-45 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 14ம் தேதிக்குள் <