News August 24, 2025
எல்.முருகன் மீது அதிருப்தியில் அமித்ஷா.. பின்னணி என்ன?

நெல்லையில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டை அடுத்து, எல்.முருகன் மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டு மேடையில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் 10 பேரை பாஜகவில் இணைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாராம் முருகன். ஆனால், Ex திமுக பிரமுகர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மட்டுமே பாஜகவில் இணைந்தார். இதனால் அமித்ஷா கடும் அப்செட்டில் இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 438 ▶குறள்:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
▶ பொருள்: எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.
News August 25, 2025
அப்போ வாக்கு திருட்டு! இப்போ ஆட்சி திருட்டு: கார்கே காட்டம்

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் பாஜக ஈடுபட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார். ஜனநாயகத்தை சீர்குலைக்க கைது நடவடிக்கையை கருவியாக பாஜக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.
News August 25, 2025
தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பிய இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஜெயசூர்யா என்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். திருச்சி அருகே நடத்த விபத்தில் காயமடைந்த அவர், ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநாட்டுக்கு சென்று திரும்பிய வழியில் பிரபாகரன், ரித்திக் ஆகியோர் பலியான நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளது, தவெக தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.