News August 24, 2025
750 ஏக்கர் நிலம் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சர்வதேச வணிக உச்சி மாநாட்டு நேற்று தொடங்கியது. இவ்விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சேதராப்பட்டு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் 750 ஏக்கர் நிலத்தை 2 மாதத்தில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யபட உள்ளதால், தொழில் தொடங்க வருவோர் புதுச்சேரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
Similar News
News August 25, 2025
புதுவையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

இந்திய அரசின் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் தேசிய இயக்கம் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி காவல்துறை சார்பில், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஃபிட் இந்தியா சைக்கிள் பேரணி கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி பேரணியை கொடியாசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் அமைச்சர் நமச்சிவாயம் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை நிறைவு செய்தார்.
News August 24, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <
News August 24, 2025
புதுச்சேரியில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி

புதுச்சேரியில் சமீப காலங்களாக கோஷ்டி மோதலால் கொலைகள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று இன்று புதுச்சேரி சண்முகா திரையரங்கம் எதிரே பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து என்னும் வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் தாக்கியுள்ளனர், பாதிக்கப்பட்ட நபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.