News August 24, 2025
மயிலாடுதுறை: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை சமூக நல அலுவலத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 12, 2026
எஸ்.பி தலைமையில் கொடி அணி வகுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி, மணல்மேடு பகுதிகளில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மத்திய ஆயுத காவல் படையான எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) இணைந்து கொடி அணி வகுப்பு மேற்கொண்டனர்.
News March 11, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 11, 2026
மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


