News August 24, 2025

உடலை சுத்தமாக்கும் ‘துளசி தேநீர்’

image

ஆயுர்வேதத்தில் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் மூலிகையாக சொல்லப்படும் ‘துளசி’ உடலின் நச்சுகளை நீக்கக் கூடியது. மேலும், இருமல், மூச்சுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும். நன்கு கொதித்த நீரை உலர்ந்த துளசி இலைகள் மீது ஊற்றி, 20-30 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சூடாக அருந்தலாம். ஒரு நாளைக்கு 3 கப் அருந்தலாம். இதனுடன் இஞ்சி (அ) ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொள்ளலாம். SHARE IT!

Similar News

News March 13, 2026

மார்க் சாதனையை முறியடித்த 22 வயது இந்தியர்

image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூர்யா மிதா அமெரிக்காவில் 2023-ல் நண்பர்களுடன் சேர்ந்து Mercor என்ற AI கம்பெனியை தொடங்கினார். இந்த கம்பெனியின் மதிப்பு $10 பில்லியனாக ஆனதால், சூர்யாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு $2.2 பில்லியன் (₹18,000 கோடி) ஆனது. இந்நிலையில் 2026 Forbes லிஸ்டில் சூர்யா இளம் தொழிலதிபராக 22 வயதிலேயே பில்லியனராகி மார்க் சாதனையை முந்தியுள்ளார். மார்க் 23 வயதில் பில்லியனரானார்.

News March 13, 2026

ராமதாஸ் ஐகோர்ட்டில் அவசர முறையீடு

image

கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு உரிமையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், ஐகோர்ட்டை ராமதாஸ் நாடியுள்ளார். மேலும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்ததையும், அன்புமணி தரப்பு மறைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 13, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. விலை பாதியாக குறைந்தது

image

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி உணவுக் கடை வரை மூடப்பட்டதால், கோயம்பேடு சந்தையில் மட்டும் தக்காளி, வெங்காயம், கீரை உள்ளிட்ட காய்கறிகள் 2,000 டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளின்றி வீணாவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!