News August 24, 2025
சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை!

சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 24, 2025
சேலம்: தேர்வில்லாமல் ரூ.70,000 சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 24, 2025
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!

சேலம் மாவட்டம், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் படித்த முன்னாள் மாணவர்கள் மாணவியர்கள் சந்திப்பு இன்று பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டியும், ஒருவருக் ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 80 ஆரஞ்சு மிட்டாய்களையும் ஊட்டிவிட்டு அன்பை வெளிப்படுத்தி நினைவுகளைப் பகிர்ந்தனர்.
News August 24, 2025
சேலம் மாநகர காவல்துறை அறிவிப்பு!

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்காக Dash-Cam பொருத்துவது மிகவும் அவசியம். இது விபத்து நேரங்களில் ஆதாரமாகவும், குற்றச்செயல்களை தடுக்கவும், சாலை விதிமுறைகள் மீறப்படுவதை கண்டறியவும் உதவும். தங்கள் மற்றும் பிறர் உயிர் பாதுகாப்பிற்காக உங்கள் வாகனத்தில் Dash-Cam பொருத்துங்கள் என சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.