News August 24, 2025
என்னை மிரட்டிய பவுலர் யார்? ருதுராஜ் கெய்வாட் பதில்

சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மராட்டியம் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சூழலில் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் டிரெண்ட் போல்ட் என பதிலளித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
தாம்பரம் பெண்ணிடம் ரூ.1.24 கோடி மோசடி

தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பியதாகக் கூறி தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1.24 கோடியை மோசடி செய்த ஒடிசாவைச் சேர்ந்த தாவத் பிரவீன்குமார் (28), ஆகாஷ் மோகன்டி (26) ஆகிய இருவரைச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டி பணத்தைப் பறித்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 24, 2025
சட்டம் அறிவோம்: திடீரென போலீஸ் கைது செய்தால்..

வீட்டில் இருக்கும் ஒருவரை புகார் ஒன்றின் பேரில், திடீரென போலீஸ் கைது செய்யும் காட்சிகள் படங்களில் காட்டப்படும். ஆனால், CrPC 41, CrPC 41A பிரிவுகளின் படி, ஒருவரை கைது செய்ய போலீசாரிடம் பிடிவாரண்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிடிவாரண்டுடன் கைது செய்யப்பட்டாலும், CrPC 21 சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் உடனே ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT.
News August 24, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்