News August 24, 2025
இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.
Similar News
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
News March 16, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். மார்ச் 19 (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறையாகும். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!
News March 16, 2026
தனித்து விடப்பட்ட ராமதாஸ்

தை பிறந்தால் வழி பிறக்கும், நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என கூறி வந்த ராமதாஸ், தற்போது வரை எந்தக் கூட்டணியிலும் இணையவில்லை. தைலாபுரத்தில் தன்னை சந்தித்த சசிகலாவிடம் கூட்டணியில் சேர விருப்பமில்லை என அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என <<19396552>>CTR நிர்மல்குமார்<<>> கூறியுள்ளார். இதனால் ராமதாஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


