News August 24, 2025
இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.
Similar News
News August 24, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு.. HAPPY NEWS

+1 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை (ஆக.25) பிற்பகல் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். SHARE IT.
News August 24, 2025
Exclusive போட்டோஸ்.. ₹3.5 லட்சம் சம்பாதிக்கும் தர்ஷா குப்தா

ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டிய தர்ஷா குப்தா, முழுநேர இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சராக மாறிவிட்டார். தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில், தனது Exclusive ஆன போட்டோக்களை பார்ப்பதற்காக மாத Subscription ₹440 வசூலிக்கிறாராம். தற்போது 800 பேருக்கு மேல் Subscription செய்துள்ளதை கணக்கிட்டால், மாதம் இதன் மூலம் மட்டுமே ₹3.5 லட்சம் சம்பாதிக்கிறாராம்.
News August 24, 2025
டாஸ்மாக் அரசுக்கு, தூய்மை பணி தனியாருக்கா? சீமான்

மக்களின் உயிரை கொல்லும் TASMAC கடையை அரசு நடத்தும்போது, தூய்மை பணியை அரசு நடத்த தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சாரத்துறை அலட்சியத்தால் உயிரிழந்த இளம் தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டால் போதுமா என்றார். மேலும், குடிநீர், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளை தனியாருக்கு கொடுத்தால் அரசு எதற்கு என சாடினார்.