News August 24, 2025

சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்

image

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 75 இடங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகளை பொருத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ‘IoT-based environmental sensors’ என்ற கருவி மூலம், வெப்பம், ஈரப்பதம், மாசு அளவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவிலேயே இத்தகைய கருவிகள் பொருத்தும் முதல் நகரமாக சென்னை மாறும் என கூறப்படுகிறது.

Similar News

News March 13, 2026

சென்னையில் டீ, காபி விலை கடும் உயர்வு?

image

கள்ளச்சந்தையில் ஒரு காஸ் சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால், சென்னையில் டீ, காபி விலையை கடை உரிமையாளர்கள் இரட்டிப்பாக உயர்த்தி விட்டனர். சென்னையில் டீ கடைகளில் ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் காபி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று காலை சென்னையில் பெரும்பாலான கடைகளில் டீ ரூ.20, காபி ரூ.25 என விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News March 13, 2026

சென்னையில் கொடுமையின் உச்சம்!

image

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சிலம்பரசன்(21). இவருக்கு அதேப் பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெண் வீட்டுக்கு வந்த சிலம்பரசன் பெண்ணின் 14 வயது தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 13, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!