News August 23, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 23) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலீசார் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் மக்கள்.

image

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். அருவியில் குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

News August 24, 2025

திருப்பத்தூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக

▶️ 4 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 2 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 4 நகராட்சி
▶️ 3 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 4 வட்டங்கள்
▶️ 195 வருவாய் கிராமங்கள்
▶️ 208 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 6 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 23, 2025

திருப்பத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

image

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று (23.08.2025) காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விழாக்குழு அமைப்பினர், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!