News August 23, 2025
கோவைக்கு நாளை வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (24.08.2025) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு காந்திபுரம் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்து, 11.35 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் ரூ.21.55 கோடி மதிப்பில் புதுப்பிப்பு பணிகளைத் தொடங்குகிறார் என திமுக மா. செயலாளர் நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 5, 2026
பொள்ளாச்சி: தட்டி தூக்கிய அதிமுக!

பொள்ளாச்சி தேவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் அக்கட்சிகளிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் வ.ஜெயராமன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களைச் சால்வை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் இம்மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
News March 5, 2026
மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் குடும்ப பிரச்சினை, இடம் மற்றும் பண பிரச்சினை தொடர்பான 45 மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு சுமூக தீர்வும், இரு மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


