News August 23, 2025

இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 10, 2026

மார்ச் 10: வரலாற்றில் இன்று

image

*1922 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். *1948 – இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மதராஸில் தொடங்கப்பட்டது. *1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம். *1980 – திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த தினம். *1897 – இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே நினைவு தினம்.

News March 10, 2026

இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

image

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

News March 10, 2026

தனிமையில் இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

image

சிலர் எப்போது பார்த்தாலும் தனிமையிலேயே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு அமைப்பு & ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறதாம்.

error: Content is protected !!