News August 23, 2025
தர்மஸ்தலா வழக்கில் அதிரடி திருப்பம்

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ரேப் செய்து கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பணியாளர் அடையாளம் காட்டிய இடத்தில் எந்தவித உடல்களும் இல்லை என்பது SIT விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொய்யான புகார் அளித்ததாக பணியாளர் சின்னையா கைதாகியுள்ளார். அவரது வழக்கறிஞர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
‘புலவர்’ அவதாரம் எடுத்த பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்திற்கு ‘புலவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி முருகையா இப்படத்தை இயக்குகிறார். ‘புலவர்’ படம் க்ரைம் கதைக்களத்தை மையமாக கொண்டது. ‘கடைசி விவசாயி’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் புலவரை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.
News August 23, 2025
கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதீங்க பாஸ்!

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?
News August 23, 2025
TN விவசாயிகளுக்காக பேசிய கவர்னர் RN ரவி!

டெல்லியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த கவர்னர் RN ரவி, TN விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்காக கோரிக்கை விடுத்ததாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவதாக திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?