News August 23, 2025
ECR சாலையில் மீனவர்கள் சாலை மறியல்

காலாப்பட்டில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 23, 2025
பதவி பறிப்பு மசோதா குறித்து நாராயணசாமி கருத்து

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. கடந்த தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
News August 23, 2025
புதுச்சேரி: தீர்ப்பளித்த நீதிபதிகளின் விவரம்

புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் இதற்கு முன்பும் தற்போதும் பணியாற்றிய நீதிபதிகளின் விவரங்களை புதுச்சேரி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த <
News August 23, 2025
ரங்கசாமி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்பார் – பாஜக தலைவர்

புதுவை பாஜக தலைவர் ராமலிங்கம் செய்தியாளர்களிடம் இன்று (ஆக.23) கூறியதாவது: முதலமைச்சர் ரங்கசாமி புத்திசாலி. அவருக்கு எந்த கட்சியுடன் கூட்டணி இருந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என நன்றாக தெரியும். நட்பு ரீதியாக விஜயுடன் முதல்வர் பேசுவார். விஜய் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வருவார் என பேசினார்.