News April 8, 2024

செங்கல்பட்டு அருகே அபாயம்

image

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் – கிழக்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பக்கவாட்டு சுவரில் இருந்து நீர் கசிந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 26, 2025

செங்கல்பட்டு இளைஞர்களே நாளை மாறவாதீர்கள்!

image

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, நாளை செப் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. பையனுாரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.

News September 25, 2025

காலாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

image

காலாண்டு விடுமுறை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்துசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் செப். 26, 27, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2,430 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து மேற்கண்ட நாட்களில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

News September 25, 2025

இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

error: Content is protected !!