News August 23, 2025
கஞ்சா புகார்: ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்.

கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சித் தலைவர் முருகன், நேற்று (ஆக.22) கிராம மக்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், கஞ்சா விற்பனை குறித்துத் தான் தகவல் தெரிவித்ததால் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் இங்கே<
News March 5, 2026
விழுப்புரம் BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

விழுப்புரம் மக்களே.., சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். மேல்மலையனூர் – 04145-234231, வல்லம் – 04145-235241, செஞ்சி – 04145-222011, வானூர் – 0413-2677310, மரக்காணம் – 04147-239231, மைலம் – 04147-237224, ஒலக்கூர் – 04147-238314, விக்கிரவாண்டி – 04146-233208, கண்டமங்கலம் – 0413-2644128, கோலியனூர் – 04146-260312.
News March 5, 2026
விழுப்புரம் ரயில் நிலையத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (38), விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று ரயில் யார்டில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவி மூலம் அவர் சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


