News August 23, 2025
நாமக்கல்லில் ஒரு அருமையான வாய்ப்பு!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 25 நாட்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு, பால் உற்பத்தி, செம்மறியாடு வளர்ப்பு, ஜப்பானிய காடை, மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 99430-08802 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான வாய்ப்பை SHARE பண்ணுங்க!
Similar News
News August 23, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும், மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் நல்ல மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 23, 2025
நாமக்கல்: தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி!

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடம் முதல் தளத்தில் இயங்கும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286–291178, 94450-29508 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
News August 23, 2025
நாமக்கல்: மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் நோக்கில் திறனாய்வு தேர்வு அக்டோபர் 11 சனிக்கிழமை அன்று நடைபெறும் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் மற்ற தனியார் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.