News August 23, 2025

பவானிசாகர் மீனவர்கள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் வாபஸ்

image

பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் குத்தகை உரிமத்தில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பங்குதாரர்களாக சேர்க்க கோரி மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்நிலையில் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News August 23, 2025

ஈரோடு: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

image

ஈரோடு மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 23, 2025

சத்தியமங்கலம் பகுதியை தனி மாவட்டமாக மாற்ற கோரிக்கை!

image

சத்தியமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம். புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அலுவலகத்தில் நாளை 24.8.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

ஈரோட்டில் அதிகளவில் மது குடித்தவர் உயிரிழப்பு

image

ஈரோடு முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60).சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் மதுபோதையில் மயங்கிக்கிடந்தார். இதன்பேரில், சேகரின் குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!