News August 23, 2025
கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து நெரிசல்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நள்ளிரவு முதல் வெளுத்தெடுத்த கனமழையினால், சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் ஒரு அடிக்கு மேலாகத் தேங்கிய மழைநீர் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஓட்டுநர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Similar News
News August 23, 2025
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (ஆக.22) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டு மானியத் தொகையை வரும் 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
News August 23, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மரபுச் சந்தை

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் 181-வது மரபுச் சந்தை, நாளை (ஆக.24) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலக மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், பசு நெய், தேன், ஊறுகாய், தின்பண்டங்கள் மற்றும் ரசாயனமில்லா காய்கறிகள் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
News August 23, 2025
போச்சம்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிகரம் அரிமா சங்கம் மற்றும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் இருதய மருத்துவமனை இணைந்து, நாளை (ஆக.24) இலவச இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. அரசம்பட்டி ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், சர்க்கரை மற்றும் இருதயப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. SHARE பண்ணுங்க.