News August 23, 2025
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா அறிவிப்பு

காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக காசாவுக்குள் உணவைக் கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும், ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுத்த இஸ்ரேல் அரசு, உணவு பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய் என பதிலடி கொடுத்துள்ளது.
Similar News
News August 23, 2025
Hero அவதாரம் எடுத்த இயக்குநர் அபிஷன்..Back Story இதான்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் வலை
வீசிக்கொண்டிருந்த நிலையில், அவரை
லாவகமாகத் தூக்கிய சௌந்தர்யா ரஜினி, அபிஷன் சொன்ன கதையைக் கேட்டவுடன் ‘இந்தக் கதைக்கு நீங்கதான் ஹீரோ என்றாராம். மேலும், யார்கிட்டயும் கதையை சொல்லவேண்டாம்’ என்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சீக்ரெட்டாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
News August 23, 2025
மூத்த தலைவர் மறைவு..CM ஸ்டாலின் இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதாகர் ரெட்டி தனது வாழ்க்கையை மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்ததாக குறிப்பிட்ட அவர், அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்க்கை தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
News August 23, 2025
2-வது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டா?

விவாகரத்து (அ) முதல் மனைவி இறந்தால் மட்டுமே, 2-வது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டு. ஆனால், சட்டப்பூர்வ பிரிவு இன்றி 2-வது திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் உரிமை உண்டு. இதில், முதல் மனைவியின் குழந்தைக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், 2-வது திருமணம் செய்யும் பெண்ணுக்கு, அதற்கு முன்பாக குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு 2-வது கணவரின் சொத்தில் உரிமை கிடையாது.