News August 23, 2025
போதை பழக்கத்தை தடுக்க புதிய முயற்சி: CBSE அறிவிப்பு

மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க, தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புடன் (NCB), CBSE ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதன்படி, போதைப் பொருள்களை தடுப்பது குறித்து, நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மாணவர்களிடம் போதைப் பழக்கத்தின் தீமைகள், பாசிடிவ் லைப்ஸ்டைலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். தமிழக அரசும் இதை பின்பற்றலாமே?
Similar News
News March 20, 2026
BREAKING: பெட்ரோல் விலை உயர்ந்தது.. புதிய அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலியாக பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ₹2.09 முதல் ₹2.35 வரை உயர்த்துவதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரத்தில், சாதாரண பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
News March 20, 2026
அதிமுகவா? அமித்ஷா திமுகவா? KN நேரு

’டெல்லிக்கு EPS ஓடுவதற்கு பெயர்தான் அதிமுக கூட்டணிக்கு தலைமை தாங்குவதா?’ என KN நேரு விமர்சித்துள்ளார். ED-யின் சம்மன் பெற்றவர் போல டெல்லிக்கு சென்று, தொகுதி பங்கீட்டுக்காக 2 மணிநேரம் காத்திருந்து அமித்ஷாவை EPS சந்தித்திருக்கிறார் என சாடியுள்ளார். கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறாததை குறிப்பிட்டு, அதிமுகவா, அமித்ஷா திமுகவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 20, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

கேஸ் சிலிண்டர் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழாய் வழி கேஸ் (PNG) இணைப்புகளை விரிவுபடுத்துவதில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி சீராக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


