News April 8, 2024

தேர்தலுக்கு பிறகும் மத்தியப் படைகளை நிறுத்த வேண்டும்

image

தேர்தலுக்கு பிறகும், மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகளை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, கடந்த முறை தேர்தலுக்கு பிறகு வன்முறை மூண்டதாகவும், அதுபோல இம்முறை நடைபெறாமல் இருக்க மத்தியப் படைகளை தேர்தல் முடிந்தபிறகும் நிறுத்தி வைக்கும்படி ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Similar News

News August 12, 2025

Swiggy/Zomatoல் இனி வீடு தேடி வரும் மது!

image

கேரளாவில் மதுபானங்களை Swiggy/Zomato மூலம் வீட்டுக்கு டெலிவரி Door delivery செய்யும் திட்டத்திற்கு மாநில அரசிடம் உரிமை கேட்டுள்ளது Kerala State Beverages நிர்வாகம். தற்போது இத்திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்டர் செய்ய கண்டிப்பாக 23 வயதை கடந்தவராக இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?

News August 12, 2025

மேலும் 476 அரசியல் கட்சிகளை நீக்கிய EC

image

தேர்தலில் போட்டியிடாத பதிவுசெய்யப்பட்ட 476 கட்சிகளை தேர்தல் ஆணையம்(EC) நீக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 121 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 44 கட்சிகள் இதில் அடக்கம். நாட்டிலேயே குறைந்த அளவாக அந்தமான், திரிபுரா, சண்டிகரில் தலா ஒரு அரசியல் கட்சி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 334 கட்சிகளை EC நீக்கியது கவனிக்கத்தக்கது.

News August 12, 2025

பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் மூடல்

image

தமிழகத்தில் சுமார் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால், அப்பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 17 பள்ளிகளும், சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, மதுரை, ஈரோட்டில் 10 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கோவை, திருப்பூர், விருதுநகர், தி.மலை, குமரி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!