News April 8, 2024
தேங்காய் நாரில் தேர்தல் விழிப்புணர்வு

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (8.04.2024) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேங்காய் நாரினைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு விழிப்புணர்வு சின்னத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News March 13, 2026
கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
கோவை: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

கோவை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News March 13, 2026
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோவை, விளாங்குறிச்சியைச் சேர்ந்த பரணிகாந்த் (23), கைக்கோளம்பாளையம்-காளப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். தனது நண்பரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் சரண்ராஜ் (37) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


