News April 8, 2024
ஆபத்தான வளைவு பகுதியில் தடுப்புச் சுவர் அவசியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டையில் இருந்து சின்ன குமாரபாளையம் செல்லும் சாலை வழியை ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் ஆபத்தான வளைவான இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் தடுப்புச் சுவர் மற்றும் இரவில் ஒளிரும் பட்டை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்து உள்ளனர் .
Similar News
News March 7, 2026
திருப்பூரை சேர்ந்தவர் பலி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த செந்தில்குமார், கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சென்றபோது முதலாம் மலைப் பாதையில் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரை டோலி கட்டி மீட்டு அடிவாரத்திற்குத் தூக்கி வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
News March 7, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 7, 2026
11 பேருக்கு அபராதம்

திருப்பூர் கொங்குநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாகவும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கும் மொத்தம் ரூ. 1,21,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


