News August 22, 2025
BREAKING: இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது!

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை Ex அதிபர் ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 2023-ல் லண்டனுக்கு அரசுமுறை பயணமாக சென்றபோது இந்திய மதிப்பில், அரசு பணம் சுமார் ₹13,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
Similar News
News March 24, 2026
ரேஷன் கார்டுகளுக்கு.. இரவில் இனிப்பான அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். பொங்கல் தொகுப்புடன் ₹1,000 பரிசுத்தொகை அளிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.
News March 24, 2026
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது வடகொரியா

தென் கொரியாவை நிரந்தர எதிரியாக அறிவித்த கிம் ஜாங் உன், வட கொரியாவில் அணு ஆயுத திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காக அணு ஆயுதக் குறைப்பை முன்வைத்த US-ன் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் வட கொரியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தயக்கமின்றி, இரக்கமின்றி எதிர்கொள்வோம் எனவும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
News March 24, 2026
மாதம் ₹3,000.. வெளியானது அறிவிப்பு!

60 வயதுக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் ₹3,000 ஓய்வூதியம் பெறும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் (PM-SYM). இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கு வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும், மாத வருமானம் ₹15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் தகுதியுடையவர் என்றால் இந்த <


