News August 22, 2025

தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு.

image

விழுப்புரம்: கிராமங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிராமப்புறத் தூய்மைப் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இது சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

விழுப்புரத்தில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News August 22, 2025

விழுப்புரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் கைது!

image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவபாலன். பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (ஆகஸ்ட் 22) பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News August 22, 2025

விழுப்புரம் மக்களே எச்சரிக்கையாக இருங்க!!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், உங்கள் வாகனங்களை பார்க்கிங்க் இடத்தில் நிறுத்தப்படும் போது. அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் என விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!