News August 22, 2025

தஞ்சாவூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 5, 2026

தஞ்சை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 5, 2026

தஞ்சை: தொகுதி பங்கீடு ஒப்பந்தம் வெற்றி – முதல்வர் ஸ்டாலின்

image

தஞ்சையில் நடைபெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்று, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் இன்று கலந்து கொள்ள உள்ளேன்’ என தெரிவித்தார்.

News March 5, 2026

தஞ்சை: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோர்ட் அதிரடி

image

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அருள் (22) என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!