News April 8, 2024
அவலாஞ்சி அணை வறண்டு போகும் அபாயம்

உதகையில் இருந்து 35 கிமீ தொலைவில் அவலாஞ்சி அணை உள்ளது . இந்த அணை நீர் மின்சாரம் உற்பத்திக்கு உதவியாக உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. அதனால் அணையில் குறைந்த அளவு நீர் மட்டம் இருந்தது. அதன் பிறகு 6 மாதங்களாக மழை இல்லை. சுட்டெரிக்கும் வெயில் கொளுத்துகிறது. அணைக்கு ஊற்று நீர் வரத்து இல்லை. இதனால் அணை வறண்டு போகும் அபாய கட்டத்தில் உள்ளது.
Similar News
News September 19, 2025
நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 19, 2025
நீலகிரி: எங்கெல்லாம் மின்தடை? தெரியுமா!

ஊட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பிங்கர்போஸ்ட், காந்தல், ஹில்பங்க், கோடப்பமந்து, இத்தலார், ஆடாச்சோலை, எப்பநாடு, மரகல், கோழிப்பண்ணை, தாவனை, உள்ளத்தி, சக்தி நகர், தேனாடு, கம்பை, எம்.பாலடா, கடநாடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
ஊட்டியில் அரசு பஸ் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி!

ஊட்டி நொண்டிமேடு பகுதியில் இன்டர்லாக் கற்களால் ஆன சரிவான சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்று முன்தினம் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தால், அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.