News August 22, 2025
மயிலாடுதுறை: தந்தையை கொலை செய்த மகன்

செம்பனார்கோயில் காவல் சரகம் மேலபாதி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்பத் தகராறில் அவரது மகனே அவரை கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து செம்பனார்கோயில் போலீசார் சிவகுமாரின் மகன் அபினேஷ் (25) என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
Similar News
News August 22, 2025
மயிலாடுதுறை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
News August 22, 2025
மயிலாடுதுறை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து அங்கிருந்த மருத்துவ அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டார்.
News August 22, 2025
மயிலாடுதுறை: கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து நேரடியாக அவர் கேட்டறிந்தார். பின்னர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரடியாக பார்வையிட்டார்.