News August 22, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 29-ந்தேதி அன்று ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈடுசெய்ய செப்டம்பர் 13-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 22, 2025
நாகையில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி!

நாகை ஐஒபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி வருகிற ஆக.28ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கி கடனுதவி ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவிற்கு 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT!
News August 22, 2025
நாகையில் அப்பா அம்மா மகனுக்கு ஆயுள் தண்டனை

நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி என்பவரை கடந்த 2022ல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் நாகை மாவட்ட நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பரமசிவம், பாக்கியவதி, மகாதேவன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
News August 22, 2025
நாகை மக்களே.. அரசு வங்கியில் வேலை! APPLY NOW

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <