News August 22, 2025
ஆகஸ்ட் 22: வரலாற்றில் இன்று

*1639 – நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) பிரிட்டிஷ் அமைத்தது.
*1894 – SA-வில் இந்திய வணிகர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடால் இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பை மகாத்மா காந்தி துவக்கினார்.
*1955 – நடிகர் சிரஞ்சீவியின் பிறந்ததினம்.
*1958 – நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்ததினம்.
*1932 – தொலைக்காட்சி சேவை துவங்க BBC சோதித்தது.
Similar News
News August 22, 2025
சோழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி

PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
சற்றுமுன்: பாஜகவில் இணைந்தார் திமுக Ex பிரபலம்

திமுக Ex பிரபலம் KS ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித் துண்டை போர்த்தி அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையை சேர்ந்த KS ராதாகிருஷ்ணன், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். 2022-ல் கார்கேவை விமர்சித்ததற்காக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
News August 22, 2025
சட்டம் அறிவோம்: இரவில் ரயிலில் பயணிக்கும் போது..

இரவு ரயில் பயணங்களில் பலருக்கும் நெருடலை உண்டாக்குவது லைட் வெளிச்சம் தான். ஒருவருக்காக லைட்டுகள் எரிய விடப்பட்டிருக்கும். சங்கோச்சத்தின் காரணமாக, கேட்க முடியாமல் அமைதியாக இருப்போம். ஆனால், IRCTC விதியின் படி, இரவு 10 மணிக்கு மேல் பொது விளக்குகளை அணைக்கப்பட வேண்டும். தனிநபர் படிக்கவோ அல்லது எழுதவோ எண்ணினால், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், ரீடிங் லைட்களைப் பயன்படுத்தலாம். SHARE IT.