News August 22, 2025
டெல்லியில் தெருநாய்கள் நிலை? SC-ல் இன்று முடிவு

டெல்லியில் தெருநாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என SC அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் 3 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆக.,14-ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
Similar News
News March 14, 2026
விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.
News March 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
News March 14, 2026
உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.


