News April 8, 2024

சென்னை காவல் ஆணையரகம் எச்சரிக்கை

image

பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராய நகா், காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று(ஏப்.8) பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 144 தடை சட்டத்தின் கீழ் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு.

Similar News

News January 16, 2026

சென்னை: சாலை விபத்தில் IT ஊழியர் பலி!

image

சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் கோகுல கிருஷ்ணன் (23) கே.கே.நகர் சாலையில் நேற்று டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி பைக் மரத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் எதிர் திசையில் வந்த டெலிவரி ஊழியர் சுரேன் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 16, 2026

சென்னை: ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

போரூர் ஹெரிடேஜ் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் இளவரசன் (36) பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதியன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.13.20 லட்சம் பணம், தங்க நாணயங்கள் திருடப்பட்டன. புகாரின் பேரில் வானகரம் போலீசார், சூர்யா, முரளி, டில்லிபாபு, வாணி, யுவஸ்ரீ, ஆர்த்தி ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.2 லட்சம் பணத்தை மீட்டனர்.

News January 16, 2026

சென்னையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை!

image

மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 30 வயது பெண் சென்னை சின்னமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி அப்பெண் தங்கியிருந்த அறைக்கு சென்ற அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ராஜ், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் பேரில், மயிலாப்பூர் போலீசார் நேற்று ராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!