News August 21, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 21 ) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக R. குணவர்மன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஷேர் செய்யவும்.
Similar News
News August 21, 2025
தருமபுரி பெண் குழந்தைகளுக்கான மாநில விருது

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சாதனைப் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் வழங்கப்படும் இவ்விருதிற்கு, நவம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலரை 04342-233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 21, 2025
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து நேற்று (ஆகஸ்ட் 20) 1,00,000 கன அடியாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து இன்று (ஆகஸ்ட் 21) காலை 8 மணி நிலவரப்படி 30,000 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் நான்காவது நாளாக தடை நீடிக்கிறது.
News August 21, 2025
தர்மபுரி: தாசில்தார்,VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

தர்மபுரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) தர்மபுரி மாவட்ட அலுவகத்தை (04342-260042) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*